புதுடெல்லி: உத்தராகண்ட்டின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்களில் 4 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 5 பேரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வருவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
உத்தராகண்ட்டின் சாமோலி மாவட்டத்தில் உள்ள உயரமான மனா கிராமத்தில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பின் முகாமில் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்பட்ட பனிச்சரிவில் 55 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், அவர்களில் 50 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.