புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பஹரைச் மாவட்ட கேசர்கஞ்சின் கிராமங்களில் கடந்த செப்டம்பர் 9 முதல் ஓநாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இமயமலை அடிவாரத்தில் நதிக்கரைகளில் பொதுமக்கள் வாழும் பகுதியில் ஓநாய்கள் தாக்கியதில் 4 குழந்தைகள், ஒரு பெண் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 11 குழந்தைகள் உட்பட 29 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், செப்டம்பர் 27-ம் தேதி நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். பின்னர் அந்தப் பகுதியை வான்வழியாகவும் வன அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.