புதுடெல்லி: உத்தர பிரதேச சிறுமியிடம் இருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம், பாலியல் வன்கொடுமை முயற்சி அல்ல என அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
உத்தர பிரதேச கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் லிப்ட் கொடுத்துள்ளனர். வழியில் அந்த சிறுமியை மானபங்கம் செய்த அவர்கள், சிறுமியின் ஆடையையும் அவிழ்க்க முயன்றனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் வந்த இருவர் பார்த்ததால், பைக்கில் வந்த நபர்கள் தப்பிச் சென்றனர்.