மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய புள்ளிகளாக உள்ள உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் மீண்டும் ஒன்றிணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது தங்களுக்கு மகிழ்ச்சி என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
“அவர்கள் இருவரும் ஒன்றிணைவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் இணைவதில் யாரும் வருத்தப்பட எந்தக் காரணமும் இல்லை. ஒருவர் அழைப்பு விடுக்க, அதற்கு மற்றொருவர் பதில் தந்துள்ளார். அதில் நாங்கள் ஏன் தலையிட வேண்டும்?” என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.