புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்டவர்களே என்ற ஊழல் தடுப்பு லோக்பாலின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
ஒரு வழக்கில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற நீதிபதி செயல்பட்டதாக அவருக்கு எதிராக லோக்பாலில் புகார் அளிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்டவர்களே என லோக்பால் தீர்ப்பளிக்க அந்த வழக்கே அடிப்படையாக அமைந்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான லோக்பால் அமர்வு கடந்த ஜனவரி 27-ம் தேதி இந்த உத்தரவினை பிறப்பித்தது.