சமூகத்தில் பல விதமான சிக்கல்கள். அவற்றில் ஒன்று சாலை விபத்துகள். விபத்தில் ஒருவர் காயம் அடைந்தால், அவரை மருத்துவமனையில் சேர்க்க தயங்கிய காலம் உண்டு. போலீஸ், வழக்கு, சாட்சியம் என்று அலைக்கழிப்புகள். உதவி செய்பவரை குற்றவாளி போல் பார்க்கும் அணுகுமுறை. இதற்கு தீர்வு காண விபத்துகளில் சிக்கியவரை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்பவர்களை போலீஸார் கடுமையாக நடத்த கூடாது என்று அரசு உத்தரவிட்டது.
அதேநேரத்தில், ஒழுங்கற்ற சாலைகள், அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, பொழுதுபோக்குக்காக தாறுமாறாக ஓட்டுவது, குறிப்பிட்ட நேரத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று ஓட்டுவது, செல்போனை பேசிக்கொண்டே ஓட்டுவது… இப்படி ஏராளமான காரணங்கள்.