மதுரை: உலகளவில் பிளாஸ்டிக் மாசு பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. நம் முன்னோர் சுற்றுச்சூழல் குறித்த பெரும் அறிவையும், விழிப் புணர்வையும் கொண்டிருந்தனர். அதற்கு இலக்கியங்களில் கூட ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இன்று எந்தளவுக்கு நவீனம் மனித வாழ்க்கைக்கு உதவுகிறதோ, அதே அளவுக்கு சுற்றுச்சூழலுக்கும், உடல் ஆரோக்கி யத்துக்கும் கெடுதலை உண்டாக்குகிறது.
இதுகுறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங் கியல் துறை பேராசிரியர் எம்.ராஜேஷ் கூறியதாவது: 2025-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தினம், ‘பிளாஸ்டிக்கை முறியடிப்போம்’ என்ற பிரச்சாரம் உலகம் முழுவதும் முன்னெடுக் கப்படுகிறது. ஆழமான பெருங்கடல்கள் முதல் மிக உயர்ந்த மலை கள் வரை, பிளாஸ்டிக் கழிவுகள் இப்போது எல்லா இடங் களிலும் காணப்படுகின்றன. இவை நிலப்பரப்புகளை குப்பைகளாக்குகின்றன. வன விலங்கு களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.