கப்பல்களை நிறுத்திவைக்கவும், சரக்குப் பொருள்களை ஏற்றி இறக்கவும் சேவைகளையும் வசதிகளையும் வழங்கும் சிங்கப்பூர் துறைமுகம், சிங்கப்பூரின் பொருளாதாரத்துக்கும் வளர்ச்சிக்கும் முக்கியமான பங்களிப்பைச் செய்துவருகிறது. ஒரு சிறிய நகரமாக இருந்த காலத்தில் ஆற்றங்கரையில் ஒரு துறைமுகத்துடன் சிங்கப்பூர் இயங்கிக் கொண்டிருந்தது.
இன்றைக்கு உலகில் உள்ள பல்வேறு துறைமுகங்களுடனான இணைப்பைக் கொண்டிருக்கும் அளவுக்கு அது மிகப் பிரம்மாண்டமானதாக விரிவடைந்திருக்கிறது. இன்றைக்கு அதிகமான சரக்குப் பெட்டகங்களைக் கையாளுகின்ற, தொடர்ச்சியான, முழுமையான பயன்பாட்டில் உள்ள உலகின் இரண்டாவது துறைமுகமாக சிங்கப்பூர் துறைமுகம் வளர்ந்திருக்கிறது.