புதுடெல்லி: உலகுக்கான முடிவுகளை சிலர் மட்டுமே எடுப்பார்கள்; மற்றவர்கள் அவற்றை கடைப்பிடிக்க மட்டுமே செய்வார்கள் என்ற வழக்கம் இனி இருக்க முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற 2வது ஐஐசி-ப்ரூகல் ஆண்டு கருத்தரங்கின் தொடக்க விழாவில் உரையாற்றிய ஜெய்சங்கர், மிகவும் நிலையற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் இருப்பதாக சொல்லப்படும் உலகில், வலுவான இந்திய – ஐரோப்பிய உறவு ஒரு முக்கியமான உறுதிப்படுத்தும் காரணியாக இருக்கும்.