டேராடூன்: உத்தராகண்டின் வளமான இமயமலை பல்லுயிர், சுற்றுச்சூழல் சமநிலையை பராமரித்தல், நீர் வளங்களை பாதுகாத்தல், உள்ளூர் மற்றும் பிராந்திய காலநிலையை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில், மிஷன் லைப் திட்டத்துக்கு இணங்க ரெக்கிட் ஆதரவுடன் டெட்டால் காலநிலை நெகிழ்வுதிறன் கொண்ட பள்ளிகள் (டிசிஆர்எஸ்) திட்டம், “உத்தராகண்ட் பல்லுயிர் கண்டுபிடிப்பு தொகுப்பை (Kit)’’ அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு கல்வி கற்பதையும், அவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த தொகுப்பு, மாநிலத்தின் தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மையமாகக் கொண்டது.