சென்னை: உலக நாடுகளிடையே இந்தியாவின் அரசியல் பலத்தை அதிகப்படுத்த மின்னணு பொருட்களின் ஏற்றுமதி நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மின்னணு தொழில்கள் சங்கத்தின் சார்பில் ‘இந்தியாவின் மின்னணு பொருட்களுக்கான விநியோக சங்கிலி’ குறித்த மாநாடு மற்றும் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.