புதுடெல்லி: பொருளாதார சுயநலம் காரணமாக பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு குறித்து மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பிரதமர் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.
டெல்லியில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள செமிகான் இந்தியா-2025 மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: