புதுடெல்லி: “உத்தரப் பிரதேச அரசின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்களைக் கூறுகிறது,” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். மேலும், உத்தரப் பிரதேசம் 9 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் இன்று (மார்ச் 5) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக அரசாங்கத்தின் கீழ் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் சீரழிந்துவிட்டன. சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பட்ஜெட் எட்டு ஆண்டுகளாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலதிபர்கள் அனைவரும் கவலைப்படுகிறார்கள்.