புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பிளஸ் 1 மாணவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இப்பல்கலைக்கழக வளாகத்தில் சமீப காலமாக துப்பாக்கிக் கலாச்சாரம் மீண்டும் பெருகுவதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. சுமார் 150 வருட பழமையான இந்த மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிகளும் உள்ளன. அதில் ஒரு பள்ளியான ஏபிகே யூனியன் பள்ளியில் நேற்று (சனிக்கிழமை) மதியம் ப்ளஸ் 1 பயிலும் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சகமாணவருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.