உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகை நாளில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தை ஒத்திவைக்குமாறு முஸ்லிம்களுக்கு லக்னோ மவுலானா காலீத் ராஷீத் அறிவுறுத்தியுள்ளார்.
வட இந்தியாவின் முக்கிய பண்டிகையான ஹோலி, இந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதே நாளில் ரமலான் மாதத்தின் புனித நாளான இரண்டாவது வெள்ளிக்கிழமையும் வருகிறது. இரண்டும் ஒரே நாளில் வருவது உ.பி. அரசுக்கு சவாலான சூழலை உருவாக்கி உள்ளது.