புதுடெல்லி: உ.பி.யில் குற்றச்செயல்கள் அதிகம் நிகழ்கின்றன. இங்கு பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் குற்றவாளிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தற்போது ‘ஆபரேஷன் லங்கடா’ எனும் பெயரில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற 20 என்கவுன்ட்டர்களில் 10 முக்கிய குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.