சென்னை: “9-வது நிதிக் குழுவில், தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பகிர்வு விகிதம் 7 சதவீதம் என்றால், தற்போது 15-வது நிதிக்குழுவில் 4.079 சதவீதமாக குறைவாக வந்துள்ளது. இதனால், தமிழகத்துக்கு வரவேண்டிய 2.63 லட்சம் கோடி ரூபாய் இதுவரை கிடைக்காததால் தமிழகத்துக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு வந்திருக்கிறது. மாநில அரசு வாங்கும் கடனில் 32 சதவீதம் இந்த தொகை மட்டும் வருகிறது” என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.”
இது குறித்து அவர் மேலும், “மத்திய அரசின் நிதி பகிர்வைப் பொறுத்தமட்டில், அடுத்தடுத்து வந்திருக்கக்கூடிய ஒவ்வொரு நிதிக்குழுவிலும் தொடர்ந்து தமிழகத்துக்கான பங்கினை குறைத்துக் கொண்டு வந்துள்ளனர். 9-வது நிதிக்குழுவில், தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பகிர்வு விகிதம் 7 சதவீதம் என்றால், தற்போது 15-வது நிதிக்குழுவில் 4.079 சதவீதமாக குறைவாக வந்துள்ளது. இதனால், தமிழகத்துக்கு வரவேண்டிய 2.63 லட்சம் கோடி ரூபாய் இதுவரை கிடைக்காததால் தமிழகத்துக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு வந்திருக்கிறது.