Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவரர் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • நியூஸ் 7 டிவி நேரலை
  • புதிய தலைமுறை டிவி
  • நியூஸ் 18 தமிழ்நாடு
  • சத்தியம் செய்திகள்
  • கலைஞர் செய்திகள்
  • ஜெயா நியூஸ்
  • பிபிசி தமிழ் நியூஸ்
  • மக்கள் டிவி நேரலை
  • தந்தி நியூஸ் டிவி
  • சன் நியூஸ் டிவி
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவரர் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு
Dinakaran Tamilnadu

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவரர் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு

EDITOR
Last updated: May 16, 2025 11:33 am
EDITOR
Published May 16, 2025
Share
SHARE

திருச்சி: ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்றுவரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க. மணிவாசன் அவர்கள் ஆய்வு செய்தார். அப்பொழுது கோயில் திருப்பணியின் பொழுது புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

அக்கல்வெட்டுகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் படியெடுத்து ஆய்வு செய்யப்பட்டது. கல்வெட்டுகளில் திருவூற்றத்தூர் என்றழைக்கப்பட்ட ஊட்டத்தூரில் மொத்தம் 13 கல்வெட்டுகள் புதியதாக கண்டறியப்பட்டன. இவற்றில் 5 கல்வெட்டுகள் முழுமையானவை மற்ற 7 கல்வெட்டுகள் துண்டுக் கல்வெட்டுகளாகவும் உள்ளன. துண்டுக் கல்வெட்டுகளில் முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்திகளின் ஒரு பகுதி மட்டுமே இடம்பெற்றுள்ளன. முழுமையாக உள்ள 5 கல்வெட்டுகளில் 4 கல்வெட்டுகள் சோழர் காலத்தியவை மற்றொன்று பாண்டியர் காலத்தைச் சார்ந்தது.

இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள காலத்தால் முந்தைய முதலாம் இராஜராஜன் கல்வெட்டு (கி.பி.1009) இரண்டாம் திருச்சுற்றில் நூற்றுக்கால் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர்களான முதலாம் இராஜாஜன் முதல் முதலாம் ராஜாதிராஜன் காலம் வரையிலான கல்வெட்டுகள் ஏதும் கோயில் கருவறைச் சுவர்களில் காணப்படவில்லை, அதுமட்டுமின்றி அக்கல்வெட்டுகள் பிற்கால எழுத்தமைதியில் பொறிக்கப்பட்டுள்ளன.

விக்கிரமசோழனின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த ஐந்து கல்வெட்டுகளில் 11-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டானது (கி.பி.1129) கருவறைக்கு முன்மண்டபத் தென்சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விக்கிரம சோழன் காலத்தில் இக்கோயில் முழுவதுமாக புனரமைக்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.

புனரமைப்பதற்கு முன்பிருந்த கோயில் கருவறை, இடைகழிமண்டபம் முன்மண்டபம் ஆகியவற்றில் வெட்டப்பட்டிருந்த முதலாம் இராஜராஜன் முதல் முதலாம் இராஜாதிராஜன் வரையிலான கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு மீண்டும் நூற்றுக்கால் மண்டபத்தில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இவை அவர்கள் வரலாற்றின்பால் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டுகின்றன.

முதலாம் இராஜராஜன் காலத்தில் மழ நாட்டுப்பிரிவின் கீழ் இருந்த ஊட்டத்தூர் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட நிர்வாகப்பிரிவான இராஜாசிரிய வளநாட்டின் கீழ் கொண்டு வந்திருக்க வேண்டும் என்பதை கல்வெட்டு வாயிலாக அறியமுடிகிறது.தற்பொழுது கிணற்றுப்பகுதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள முதலாம் பராந்தகனின் மற்றும் முதலாம் இராஜராஜனது கல்வெட்டுகள் வாயிலாக விக்கிரமசோழன் காலத்திற்கு முந்தைய காலக் கோயில் முதலாம் பராந்தகன் காலத்திலே எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்ற புதிய வராலாற்றுச் செய்தியைத் தெரிவிக்கிறது.

முதலாம் பராந்தகனின் 30வது ஆட்சியாண்டில் (கி.பி.937) திருவூற்றத்தூரில் வாழ்ந்த சுருதிமான் நிலவைலியன் என்பவரின் மனைவி பகவன் மணி நங்கை என்பவர் திருவூற்றத்தூர் பெருமானடிகள் கோயிலுக்கு கதவு செய்து கொடுத்துள்ளார்.

முதலாம் இராஜராஜனது 13-ஆம் ஆட்சியாண்டில்(கி.பி.998) நக்கன் அய்யாறன் என்கிற சுந்தரசோழ முத்தரையன் என்ற அதிகாரி இக்கோயிலில் இரவும் பகலும் எரியக்கூடிய நந்தா விளக்கினை எரிப்பதற்கு 30 பசுக்களை வழங்கியுள்ளார். இராஜராஜ சோழனின் 16-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1001) திருவூற்றத்தூர் கோயிலில் செயல்பட்டிருந்த மூலபருடை என்கிற நிருவாக சபையாரும் வாகலூர் ஊரைச் சார்ந்தவர்களும் திருவூற்றத்து நாட்டு நிர்வாகிகளும் இணைந்து கோயிலுக்குப் புன்செய் நிலம் வழங்கியுள்ளனர்.

முதலாம் இராஜேந்திர சோழனின் கங்கை மற்றும் கடாரம் வெற்றிகள் பொதுவாக மெய்க்கீர்த்தி பகுதியில் இடம்பெற்றிருக்கும். இவ்வூர் கல்வெட்டொன்றில் கெங்கையுங் கடாரமுங்கொண்ட ஸ்ரீராசேந்திரசோழன் என்ற சிறப்புப்பெயருடன் கல்வெட்டுத் தொடங்குகிறது.

பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் 18-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1270) ஊற்றத்தூரில் வாழ்ந்த ஆயன் கவிகுமாரர் என்ற கவிக்கு இடைமலை, வெட்டுணி என்ற இரு ஊர்களை குன்ற கூற்றத்து நாட்டு நிர்வாகிகள் கொடையாக வழங்கிச் சிறப்பித்துள்ளனர். சுத்தரத்னேசுவரர் என்பது தொகுமாமணி என்பதன் வடமொழியாக்கம் என்பதையும், நெடுநாளாய் பாழாய்கிடந்த குளத்தை திருத்தி வேளாண்மை மேம்பட வழிவகை செய்துள்ளனர் என்பதையும் கல்வெட்டுகள் மூலம் உய்த்துணர முடிகிறது.

தற்பொழுது புதியதாக கிடைத்துள்ள கல்வெட்டுகள் வாயிலாக முதலாம் பராந்தகன் காலத்திலேயே (கி.பி.937) இக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது என்பதையும் முதலாம் பராந்தகன் காலத்தில் இவ்வூரைச் சார்ந்த பகவன் மணி நங்கை என்ற பெண்மணி இக்கோயிலுக்கு கதவு செய்தளித்துள்ள செய்தியும் ஊற்றத்தூரில் வாழ்ந்த ஆயன் கவிகுமாரர் என்ற கவிக்கு இரண்டு ஊர்களை அளித்து சிறப்பு செய்துள்ளனர் என்கிற செய்தியும் முக்கியமானவையாக உள்ளன.

The post ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவரர் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு

EDITOR
EDITOR
May 13, 2025
இளம் திரைப்பட இயக்குநர் நாகேந்திரன் காலமானார்!
இருக்கையிலேயே மட்டையாகி சரிந்தார்; குடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவர் அதிரடி சஸ்பெண்ட்: பொள்ளாச்சி அருகே பரபரப்பு
சைபர் குற்றங்களை தடுக்கும் தொழில்நுட்பம்: ஒடிசி டெக்னாலஜீஸ் முதன் முறையாக அறிமுகம்
அதிகரிக்கும் காட்சிகள்: ‘டூரிஸ்ட் பேமிலி’ படக்குழு மகிழ்ச்சி

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?