கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே கொடி கம்பம் அகற்றியபோது, மின்சாரம் பாய்ந்து திமுக நிர்வாகி உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை வருகிற ஏப்ரல் 28-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை, அந்தந்த கட்சியினர் அகற்றி வருகின்றனர்.