சென்னை: “தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்து வீரவசனம் பேசியவர், ஊழல் கூடாரத்தில் இளைப்பாறிக் கொண்டு டப்பிங் பணி செய்கிறார்,” என மநீம தலைவர் கமல்ஹாசனை தவெக மறைமுகமாகவும் கடுமையாகவும் விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக மாநில இணைச் செய்தித் தொடர்பாளர் எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவ்வளவு நாளாக ஒருவர் பேசியது தான் மக்களுக்கு புரியவில்லை என்றால், இப்போது அவர் யார், எதற்காக வந்தார் என்பது அவருக்கே புரியாமல் பேசி வருகிறார். அவர் யாரென்று நேரடியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. சொல்லாமலே மக்களுக்கு புரியும்.