“அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி பி.எட் படித்த நாங்கள் கண்டுகொள்ள ஆளில்லாமல் கண்ணீராகி நிற்கிறோம்” என வெதும்புகிறார்கள் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள். மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் பயிற்றுவிப்பதற்காக ஐசிடி (இன்ஃபர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி) என்ற பாடத்திட்டத்தை அமல்படுத்தி, கம்பியூட்டர் லேப் அமைக்கவும், பயிற்றுநர்களை நியமிக்கவும் நிதி ஒதுக்கி வருகிறது.
அதன்படி தமிழகத்துக்கு 2021-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சுமார் ரூ.434 கோடியை ஆண்டு தோறும் ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகையில் 14,663 பள்ளிகளில் ரூ.15 ஆயிரம் மதிப்பூதியத்தில் கணினி அறிவியல் முடித்த கம்பியூட்டர் பயிற்றுநர்களை நியமித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக பள்ளிக் கல்வித்துறை அதைச் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.