மதுரை: “எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழலைத் தோண்டி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை ஒத்தக்கடையில் பேசியது: “தமிழக முதல்வர் ஸ்டாலின் கனவில் உள்ளார். அடுத்த ஆண்டு தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பகல் கனவு காண்கிறார். ஸ்டாலின் கூட்டணியை நம்பிக் கொண்டிருக்கிறார். நாங்கள் மக்களை நம்பியுள்ளோம்.