சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் எதிர்குரலை ஒடுக்கும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு அமலாக்க துறை துணை போகின்றது என எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “அரசியல் பழிவாங்கும் மத்திய அரசின் ஏவல் கருவியாக மாறிப்போயுள்ள அமலாக்க துறை, மக்கள் விரோத மத்திய ஆட்சிக்கு எதிரான எஸ்டிபிஐ கட்சியின் எதிர்குரலை ஒடுக்கும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு துணை போகின்றது. ஏற்கனவே, அமலாக்க துறையின் பல்வேறு நடவடிக்கைகளை உச்சநீதிமன்றமும் மற்றும் உயர்நீதிமன்றமும் கேள்விக்குட்படுத்தியுள்ளன.