காரைக்கால்: “தமிழகத்தில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டால் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும்” என முன்னாள் எம்.எல்.ஏவும், பாஜகவை சேர்ந்தவருமான விஜயதாரணி கூறியுள்ளார்.
காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் வழக்கறிஞராக ஆஜராகி வாதிடுவதற்காக இன்று (மார்ச் 26) நீதிமன்றத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அதற்குரிய ஆணையமோ அல்லது மத்திய அரசோ அறிவிப்பு வெளியிடவில்லை. நாடாளுமன்றத்திலும் இதுதொடர்பாக விவாதிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் தமது அரசின் தவறுகளை மறைக்கும் நடவடிக்கையாக இதனை கையில் எடுத்து, மாநில முதல்வர்களை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளார்.