கோவை: “கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கக் கூடிய உன்னதமானவர் செங்கோட்டையன்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (பிப்.19) கோவை வந்த ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “நான் விரக்தியில் இருப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்திருப்பது குறித்து பதில் சொல்ல தேவையில்லை. அவர் என்ன பேசினாலும் பேசிவிட்டு போகட்டும். அவர் பேசும் மொழி எந்த மாதிரியான மொழி என்பது மக்களுக்குத் தெரியும், அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.