சென்னை: உண்மையிலேயே மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்கள் என்றால், எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழைக் கற்பிக்கின்றன என்பது பற்றிய தரவை தாருங்கள் என்று அண்ணாமலையை கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது பதவில், “பாஜக எவ்வாறு தரவுகளை கையாளுகிறது என்பதை உலகம் அறியும். The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis என்ற புத்தகத்தில் இதை டாக்டர் பரகலா பிரபாகர் அம்பலப்படுத்தி இருக்கிறார்.