சென்னை: தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான் இருமொழி கொள்கையை கடைப்பிடிக்கிறோம் என பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, "உலகத்திலேயே இதுவரை ஒரு மொழிக்காக போராட்டங்களை நடத்தி உயிர்களை தியாகம் செய்த இனம் நமது தமிழ் இனம். இருமொழி கொள்கையின் சிறப்பை மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எடுத்துரைத்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளார். தமிழ் மொழிக்கு அதிமுக மிகப்பெரிய தொண்டை ஆற்றியுள்ளது.