சென்னை : எந்த கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டின் அனுமதி பெறாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார். ரூ.374 கோடியில் 15 மாவட்டங்களில் 21 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைமடையில் ரூ.10 கோடியில் ஒரு நீரொழுங்கி கட்டப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post எந்த கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது : சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம் appeared first on Dinakaran.