புதுடெல்லி: “மும்மொழிக் கொள்கை அதிக நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்கிறது. அதாவது. எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது,” என்று திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி பதிலளித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., கல்வித் துறை தொடர்பான சில கேள்விகளை எழுத்துபூர்வமாக கேட்டிருந்தார். அதில், “நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையின் கீழ் மாநில வாரியாக கற்பிக்கப்படும் மொழிகளின் விவரங்கள் என்னென்ன? இந்த மொழிகளைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் என்ன? இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி அல்லாத இந்திய மொழிகளைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மாநில வாரியாக என்ன?