“என் அப்பாவின் ஒழுக்கம் எனக்குள் அப்படியே ஒட்டிக் கொண்டது. அதனால் பள்ளிக்கு நான் ஒருபோதும் லேட்டாக சென்றது கிடையாது. அது மாதிரியான சிறு சிறு பழக்கவழக்கங்கள் வாழ்வில் முக்கியமானது” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
தனியார் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்த மாணவர் சந்திப்பு கூட்டத்தில் தோனி இதை பகிர்ந்துள்ளார். அதில் தனது விளையாட்டு கேரியர் குறித்தும் அவர் பேசியுள்ளார்.