ஸ்ரீநகர்: “துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பாக இஸ்லாமிய வாசகத்தை ஓதுமாறு எனது தந்தையை பயங்கரவாதிகள் வற்புறுத்தினர். அவர் மறுத்த காரணத்தால் துப்பாக்கியால் சுட்டனர்” என்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் பயங்கரத்தை இளம்பெண் ஒருவர் விவரித்துள்ளார்.
காஷ்மீருக்கு சுற்றுலா நிமித்தமாக சென்றுள்ளனர் புனேவை சேர்ந்த சந்தோஷின் குடும்பம். அவர்கள் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அப்போது அவர்கள் அந்தப் பகுதியில் இருந்த கூடாரம் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர்.