ஜாமீனில் வெளியே வந்தவுடன் நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் தர்ஷன்.
ரசிகரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பிரபல கன்னட நடிகர் தர்ஷன். இந்தச் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அவரின் காதலியும், நடிகையுமான பவித்ராவும் கைது செய்யப்பட்டார். மேலும், சிறையில் தர்ஷனுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.