இந்திய மகளிர் கால்பந்து அணியில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த பிரியதர்ஷினி செல்லத்துரை அசல் ஆட்டத்திறன் கொண்டவர் என இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்பின் சேத்ரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பைக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் மங்கோலியா அணிக்கு எதிராக இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தி இருந்தார் பிரியதர்ஷினி. அதுவும் சர்வதேச அளவில் அவர் விளையாடிய இரண்டாவது ஆட்டத்தில் இந்த கோல்களை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.