இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற முடியாமல் போனதால் தன் மகன் அபிமன்யூ ஈஸ்வரன் மனச்சோர்வடைந்து விட்டதாக அவரது தந்தை அணித்தேர்வுக்குழு மீது சாடல் தொடுத்துள்ளார்.
சில வீரர்கள் ஐபிஎல் ஆட்டங்களை வைத்து என் மகனைத் தாண்டி டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விடுகின்றனர், என் மகன் பரிசீலிக்கப்படமால் போய் விட்டான், இது நியாயமற்றது என்கிறார் அபிமன்யூ ஈஸ்வரனின் தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன்.