விழுப்புரம்: என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பாஜக மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் அவர் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில் இருந்து கடந்த 10-ம் தேதி உளுந்தூர்பேட்டைக்கு குடும்பத்துடன் காரில் சென்றேன். கடந்த 11-ம் தேதி அதிகாலை விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தோம். வலது திசையில் கார் சென்றபோது, இடது திசையில் சென்ற தனியார் சொகுசு பேருந்து திடீரென வலது திசையில் இயக்கப்பட்டு, பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. இதனால், பேருந்து மீது நான் பயணித்த கார் மோதியது.