மதுரை: ஒரு போலீஸ்காரர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதே செய்தி; அதற்கு இப்படி தலைப்பிடுவதா? என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை எம்பியின் பாதுகாவலராக இருந்த போலீஸ்காரர் மோசடியில் சிக்கினார் என நாளிதழில் செய்தி வெளியானது. ஆயுதப்படை போலீஸ் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்; அந்த வகையில் என் காவல் பணிக்கும் அனுப்பப்பட்டுள்ளார். இதே காவலர் மதுரைக்கு ஆளுநர், பிரதமர் வந்தபோது கூட காவலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார். இப்போது எப்படி தலைப்பிடுவதாக உத்தேசம் என நாளிதழுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
The post எப்படி தலைப்பிடுவதாக உத்தேசம்?: சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.