மதுரை: எப்போதும் வாக்காளர்கள் நலனுக்காக தேர்தல் ஆணையம் செயல்படும் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று காலை மதுரை வந்தார். மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் தேர்தல் பணி தொடர்பாக அதிகாரிகளுடன ஆய்வு நடத்தினேன்.