கோவை: தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் நிறுவனங்களில் 25 லட்சம் பிற மாநில தொழிலாளர்கள் பணியாற்றிவரும் நிலையில், மேற்கு வங்க முதல்வரின் சலுகை அறிவிப்பால் தொழில் துறையினர் கலக்கமடைந்துள்ளனர்.
உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழகத்தில், அடிப்படைப் பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. இதனால், ஒடிசா, உத்தரபிரதேசம், பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.