திருவனந்தபுரம்: “ஒரு திரைப்படம் அரசியல் கட்சிகளை ஆதரித்தாலும் விமர்சித்தாலும் சரி, தற்கால அரசியல் யதார்த்தை பேசுவதற்கான கருவி அது” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘எம்புரான்’ குறித்த சர்ச்சைக்கு மத்தியில் வேணுகோபல் இவ்வாறு கூறியுள்ளார்.
மலையாள நடிகர் மோகன் லால் மற்றும் நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் சுகுமாறன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எல்2: எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியானது. இந்தப் படம், நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது 2002 ஆம் ஆண்டு அங்கு நடந்த கலவரத்தை குறித்து பேசுவதால் வலதுசாரி ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கு இலக்காகியுள்ளது. .