திருநெல்வேலி: தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான இரா.நாறும்பூநாதன் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 64.
தமிழ் ஆசிரியர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தம்மாள் தம்பதியின் மகனான நாறும்பூநாதன் கழுகுமலையில் பிறந்தார். நாறும்பூநாதனின் மனைவி சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமணத்துக்கு பின்னர் திருநெல்வேலியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன் ராமகிருஷ்ணன் கனடாவில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.