சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமை வகித்தார்.