ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 'உறுதுணை' என்ற குறு மற்றும் நுண் கடன் மானிய நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.மதிவேந்தன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு அத்துறையின் அமைச்சர் மதிவேந்தன் பதிலளித்து பேசியதாவது: