எஸ்டிபிஐ கட்சிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சென்னை உட்பட நாடு முழுவதும் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 2009-ம் ஆண்டில் எஸ்டிபிஐ (இந்திய சமுதாய ஜனநாயக கட்சி) நிறுவப்பட்டது. இது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இக்கட்சி, தடை செய்யப்பட்ட 'பாப்புலர் பிரன்ட் ஆப்' இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் அரசியல் பிரிவாக கருதப்படுகிறது.