ஏகி கிரண் மராத்திய அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏகி கிரண் மராத்திய அமைப்பு கர்நாடக மாநிலத்தை கூறு போட சதி திட்டம் தீட்டி வருகிறது. இதற்கு மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா கட்சியை சேர்ந்த தலைவர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே பெலகாவியை மகாராஷ்டிராவுடன் சேர்க்க வேண்டும் என பேசி வருகிறார்கள். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.