அமராவதி: டிசிஎஸ் நிறுவனத்துக்கு ஏக்கர் 99 காசு விகிதத்தில் 21 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு , ஆந்திராவில் புதிய தொழில்களை தொடங்க நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது. இந்த சூழலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், ஆந்திராவில் தனது நிறுவனத்தை தொடங்க அனுமதி கோரியது. அந்த நிறுவனத்துக்கு விசாகப்பட்டினத்தில் 21.16 ஏக்கர் நிலத்தை வழங்க ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. ஏக்கருக்கு 99 காசு அடிப்படையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.