கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லாத மற்ற வங்கி ஏடிஎம்-களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.17-ல் இருந்து ரூ.19 ஆக வரும் மே 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட விருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி இருப்பை சரிபார்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வசூலிக்கப் படும் கட்டணம் ரூ.6-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வுக்கு ஏடிஎம்-களை நிர்வகிக்கும் செலவு அதிகரித்துள்ளதே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பெல்லாம் வங்கிகளில் பணம் எடுப்பதென்றால் வங்கிகளுக்குச் சென்று டோக்கன் வாங்கி நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுக்க வேண்டும்.