இந்திய அணியில் காயமடையும் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், இப்போது நிதிஷ் குமார் ரெட்டி தொடரிலிருந்தே விலகும் முழங்கால் காயத்திற்கு ஆட்பட்டுள்ளார்.
ஏற்கெனவே பும்ரா காய அச்சுறுத்தலில் இருக்கிறார். மனித சாத்தியங்களை மீறி பணியாற்றும் சிராஜ் எப்படி உடல் தகுதியைத் தக்க வைக்கிறார்? போன்ற கேள்விகள் எழ கம்பீரின் பயிற்சிக் காலம் குறித்த கடும் சந்தேகங்களை எழுப்பி வருகிறது.