புதுடெல்லி: அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை இரண்டு நாடுகளுக்கான பயணமாக தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். இந்திய வெளியுறவுத்துறை இதனை உறுதிப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 3 முதல் 4 வரை தாய்லாந்தின் பாங்காக்கிற்கு பயணம் மேற்கொள்கிறார். தற்போதைய பிம்ஸ்டெக்(BIMSTEC) அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தாய்லாந்து, 6வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டை ஏப்ரல் 4 ஆம் தேதி நடத்துகிறது. அதில், பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி, தாய்லாந்துக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது.