Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா ப்ரியா வழக்கில் தீர்வு காண இந்தியா முயற்சி செய்து வருகிறது
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran World

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா ப்ரியா வழக்கில் தீர்வு காண இந்தியா முயற்சி செய்து வருகிறது

EDITOR

புதுடெல்லி: மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர் வழக்கில் தீர்வு காண இந்தியா முயற்சி செய்து வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தொழில் பங்குதாரரை கொன்றதாக கேரள நர்ஸ் நிமிஷா ப்ரியாவுக்கு ஏமனின் சனா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன்படி நிமிஷா ப்ரியாவுக்கு கடந்த 16ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட இருந்தது. நிமிஷா ப்ரியாவை காப்பாற்ற கோரி உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தியாவின் கிரான்ட் முப்தி என அழைக்கப்படும் கேரள மாநிலம் காந்தரபுரம் ஷேக் அபுபக்கர் முஸ்லியார் என்பவர் ஏமனில் உள்ள மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கடைசி நிமிடத்தில் நிமிஷா ப்ரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நிமிஷா ப்ரியா விவகாரம் தொடர்பாக ஏமனில் உள்ள அதிகாரிகளுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “இதுஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். இந்த விவகாரத்தில் இந்தியா சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

நிமிஷா ப்ரியா குடும்பத்துக்கு உதவ ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளோம். மேலும் ஏமனில் உள்ள அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.

The post ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா ப்ரியா வழக்கில் தீர்வு காண இந்தியா முயற்சி செய்து வருகிறது appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

மியான்மரில் அதிகாலை 2.27 மணிக்கு மிதமான நிலநடுக்கம்

July 16, 2025

அமெரிக்காவில் இருந்து 5 பேர் ஆப்ரிக்காவுக்கு நாடு கடத்தல்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

July 16, 2025

ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீர் ராஜினாமா

July 15, 2025

கால்நடை வளர்ப்போருக்கு ஆபத்து: அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி எஸ்பிஐ எச்சரிக்கை

July 16, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?