மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்: நரேந்திர மோடி பிரதமராக உயர்ந்ததில் உத்தர பிரதேசத்தின் பங்கு உள்ளது. ஆனால் நிதியமைச்சரின் உரையில் உ.பி. பற்றி எதுவும் இல்லை. உ.பி. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அதுபற்றிய அறிவிப்பு இல்லை. உ.பி.யில் விவசாயிகளுக்கு இன்னும் சந்தைகள் இல்லை. இளைஞர்களுக்கான பயிற்சி போன்ற குறுகிய கால நடவடிக்கைகள் வேலையின்மை நெருக்கடியைத் தீர்க்காது.